Sunday, November 21, 2010

ஆட்சிக்குழுஅவசரக்கூட்டம்

புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் ஆட்சிக்குழு அவசரக் கூட்டம் தலைவர் முனைவர் வி.முத்து தலைமையில் 20.11.2010 மாலை 4.30 மணியளவில் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.கூட்டத்தில் ஆட்சிக்குழு உறுப்பினர் இபேர் தவிர மற்ற அனைவரும் கலந்து கொண்டனர் .கண் அறுவை சிகிச்சை காரணமாக வரமுடியாததை தொலைபேசியில் அவர் மகள் தெரிவித்தார். கூட்டத்தில் கீழ்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
1.ஆட்சிக்குழு பொறுப்பேற்கும் நிகழ்ச்சி 4.12.2010 அன்று நடத்துவது.நிகழ்ச்சி நிரலும் இறுதி செய்யப்பட்டது
2.இந்த மாத நிகழ்வாக தினமணி ஆசிரியரின் தினமணி தலையங்கங்கள் உண்மை தெரிந்தது சொல்வேன் நூல் ஆய்வுக் கூட்டம் 28.11.2010 அன்று நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது
நிறைவாக ஆட்சிக்குழு உறுப்பினர் முனைவர் அ.கனகராசு நன்றி கூறினார்.கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு செயலர் பொறிஞர் மு.பாலசுப்பிரமணியன் வடை மற்றும் தேநீர் வழங்கினார்

No comments:

Post a Comment