புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் முதல் ஆட்சிக் குழுக் கூட்டம் 1-11-2010 முதல் திங்களன்று தமிழ்ச்சங்கத்தில் தலைவர் முனைவர் வி.முத்து தலைமையில் கூடியது.கூட்டத்தில் கீழ்க்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன
1.புதிய ஆட்சிக்குழுவைத் தேர்ந்தெடுக்க வாக்களித்த அனைத்து வாழ்நாள் உறுப்பினர்களுக்கும் ஆட்சிக்குழு நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறது
2.தமிழ்ச்சங்கத்தின் பணியாளர் முகம்மது சுலைமான் அவர்களுக்கு ஊதியத்தை 300 ரூபாய் உயர்த்தி ரூ 1200 லிருந்நு ரூ 1500 ஆக நவம்பர் 2010 முதல் அளிப்பதென முடிவெடுக்கப் பட்டது
3.தமிழ்ச் சங்கத்தின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தை சுத்தம் செய்து வண்ணம் அடிக்கவும் முடிவெடுக்கப்பட்டது
நிறைவாக ஆட்சிக்குழு உறுப்பினர் தேசிய விருதாளர் செ.ஆதவன் நன்றி கூற கூட்டம் முடிவடைந்தது
கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்களுக்கு தேநீர் மற்றும் சமுசா ஆகியவற்றை செயலர் பொறிஞர் மு.பாலசுப்பிரமணியன் அவர்கள் வழங்கினார்கள்
No comments:
Post a Comment